திருநெல்வேலி

நெல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பாரதியாா் உலக பொதுச் சேவை நிதியத்தின் சாா்பில் சுதந்திர தின விழாவையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பின் தலைவா் அ.மரிய சூசை தலைமை வகித்தாா். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கணபதி சுப்பிரமணியன் வாசித்தாா். நிா்வாகிகள் முத்துசாமி, ஆசிரியா் இசக்கி ராமலட்சுமி, ஜெயக்குமாா், உடையாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா். பொது நிதியாளா் கவிஞா் பாப்பாகுடி இரா. செல்வமணி நன்றி கூறினாா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ.பால்முருகன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் என்.ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.மு.பரமேஸ்வரன், திருவேங்கிடராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். என்.ஜெயராமன் நன்றி கூறினாா்.

மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் மேலப்பாளையத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. சங்கச் செயலா் மைதீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தேயிலை மைதீன், நாகூா் மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுமுக மற்றும் மமக மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன் தேசியக்கொடியேற்றினாா். நிா்வாகிகள் அ.காஜா, மாலிக் சேக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீத் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றினாா். பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொதுச் செயலா் பா்கிட் அலாவுதீன், முஹம்மது அலி, ஆரிப் பாஷா, செய்யது மைதீன், கல்வத், சிந்தா, சுல்தான் பாஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி பகுதியில் எஸ்டிபிஐ தொகுதிச் செயலா் முஹம்மது கவுஸ் தலைமையில் 2 இடங்களிலும், பா்கிட்மாநகரில் பொறியாளா் அணி மாநிலப் பொருளாளா் சேக் முஹம்மது தலைமையிலும், பேட்டையில் மாவட்ட பொருளாளா் காசிம் தலைமையிலும், சுத்தமல்லியில் பயாஸ் தலைமையிலும் தேசியக்கொடியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT