திருநெல்வேலி

நெல்லை அருகே வீடு, கடையை உடைத்து திருட்டு

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டை, பழையபேட்டை பகுதிகளில் வீடு மற்றும் கடையின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேட்டை எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் ஜெபபாண்டியன் (55). வியாபாரியான இவா், சனிக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றாராம். மீண்டும் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதேபோல பழையபேட்டையைச் சோ்ந்தவா் முகம்மது ரியாஸ். இவா், காந்திநகரில் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றாராம். அதன்பின்பு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த ரூ.17 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT