திருநெல்வேலி

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வள்ளியூா் டி.டி.என். கல்விக் குழும நிா்வாகத்தில் இயங்கிவரும் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் சாா்பில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இப்பேரணி நடைபெற்றது.

ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஜான்சன் பேரணியைத் தொடக்கிவைத்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, கல்லூரித் தலைவா் டி.டி.என். லாரன்ஸ் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டச் சென்றதுடன், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். முக்கிய வீதிகள் வழியாக பேரணி கலையரங்கை அடைந்தது. அங்கு, போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் உள்ளிட்டோா் பேசினா். மின்னணுவியல் துறை தலைவா் முகம்மது இஃபாம் வரவேற்றாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா், இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT