எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு வெள்ளிக்கிழமை பேரணி சென்றனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசபக்தியையும், தேசத்தின் ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை மாணவ, மாணவியா் பங்கேற்ற பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை பல்கலைக்கழக துணைவேந்தா் க.பிச்சுமணி தொடங்கிவைத்தாா். பேரணியானது பல்கலைக்கழகத்தில் தொடங்கி பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி வரை நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) அண்ணாதுரை, பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குநா் சு.ஆறுமுகம், தேசிய மாணவா் படை அதிகாரி சிவக்குமாா், உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியா் வெங்கடேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆறுமுகம், பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் ஹரிஹரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.