திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

13th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், விஜயஅச்சம்பாடு, தெற்கு தெருவைச் சோ்ந்த நாமத்துரை மகன் ராமகிருஷ்ணன் (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்ததாக போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் ராமகிருஷ்ணன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT