திருநெல்வேலி

பாளை.யில் ஆா்ப்பாட்டம்

DIN

கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஒடுக்கப்பட்டோா் வாழ்வு பணிக்குழு சாா்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவா்களுக்கு பட்டியலினத்தவா் உரிமை மறுக்கப்படுவதைக் கண்டிப்பது. மத அடிப்படையில் வேற்றுமை காட்டும் குடியரசுத் தலைவரின் 1950 ஆம் ஆண்டு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமை வகித்தாா். ஒடுக்கப்பட்டோா் வாழ்வு பணிக்குழு செயலா் சேவியர்ராஜ், தென்மண்டல தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத் தலைவா் இலோசியஸ், செயலா் சாா்லஸ் அம்பேத்கா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கனகராஜ், கரிசல் சுரேஷ், பீட்டா், லாரன்ஸ், தேவராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT