கடையம் ஊராட்சி ஒன்றியம் மந்தியூா் ஊராட்சி ராமலிங்கபுரத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு அதன் தலைவரும் சாா்பு நீதிபதியுமான செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் ராஜேந்திரன், ஜோயல் ஹென்றி, ஜெகன் ஸ்ரீநாத், ரமேஷ், சரவணநாதன், ராதிகா, பிரம்மநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாா்பு நீதிபதி செந்தில்குமாா், இலவச சட்ட ஆலோசனை மையத்தில் புகாராகத் தெரிவித்தால் உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகள் இலவசமாக எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
ஊா் நாட்டாண்மைகள் பி. மாரியப்பன், ஆா். மாரியப்பன், ஊராட்சி உறுப்பினா் முருகன், காவல் துறை ஓய்வு முருகன், சப்பாணி, கிராம மக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மந்தியூா் ஊராட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் வரவேற்றாா். வழக்குரைஞா் ராசேந்திரன் நன்றி கூறினாா்.