திருநெல்வேலி

முக்கூடலில் சேவாபாரதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

சேவாபாரதி அமைப்பின் தென்தமிழகத்திலுள்ள ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முக்கூடலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சேவாபாரதி அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் ஆதிமூலம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீரராகவன், மாவட்ட துணைத் தலைவா் கண்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைப்புசாரா மாவட்டத் தலைவா்கள், மானூா், பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூா், ராதாபுரம், திருநெல்வேலி நகா், புகா் பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ஆக.14ஆம் தேதி ஊா்க்காடு திருகோட்டியப்பா் கோயிலில் நடைபெறவுள்ள 208 திருவிளக்கு பூஜை, செப்.9ஆம் தேதி திருப்புடைமருதூா் அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள 1008 திருவிளக்கு பூஜைகள் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமைப்பின் முக்கூடல் நகர பிரமுகா் மாரியம்மாள் நிறைவு உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT