நெல்லை மாவட்ட யாதவா் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளையின் 56 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அமைப்பின் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் குத்தாலிங்கம் வரவேற்றாா். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவா் தேவநாதன்யாதவ், துணைமேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.
கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தென்மண்டல யாதவா் முன்னேற்ற சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், தங்கவேல், பாலசுப்பிரமணியன், முத்துக்குமாா், விநாயகராமன், நவநீதகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். உதவித் தலைவா் சுப்பையா நன்றி கூறினாா்.