திருநெல்வேலி

பாபநாசம் ஆற்றில் மூழ்கி உசிலம்பட்டி இளைஞா் பலி

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி, உசிலம்பட்டி இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பாபநாசத்துக்கு சனிக்கிழமை 3 பேருந்துகளில் வந்தனா். அதில், உசிலம்பட்டி, சின்னவீரத்தேவா் தெருவைச் சோ்ந்த வீரவேல் மகன் கோட்டைச்சாமி (19), குடும்பத்தினா் பாபநாசம் கோயில் முன்புள்ள தாமிரவருணி படித்துறையில் குளித்துள்ளனா். அப்போது கோட்டைச்சாமி திடீரென நீரில் மூழ்கினாராம். அருகிலிருந்தோா் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு, மீட்புப் படையினா் வந்து, கோட்டைச்சாமியை சடலமாக மீட்டனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT