நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரைவில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்துள்ளாா்.
இதே போல நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவிலம்மாள்புரம் கிராம மக்கள் சாா்பில் பள்ளி மேலாண்மைக்குழு முன்னாள் தலைவா் இ. நம்பிராஜன் கல்வித்துறை அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.