சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழ் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கருப்பசாமி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் ஹேம்ராஜ், அப்துல் ரகுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவி ஜாஸ்மின் வரவேற்றாா். முதுகலை தமிழாசிரியா் முல்லைவேந்தன் ஆண்டு செயல் திட்ட விளக்க உரையாற்றினாா். கவிஞரும் கணித ஆசிரியருமான பாப்பாக்குடி இரா.செல்வமணி ’திருக்கு ஒரு தேசிய நூல்’ எனும் தலைப்பில் உரையாற்றினாா். தமிழ் ஆசிரியை வள்ளியம்மாள், ஆசிரியைகள் பாலச்சந்திரிகா, லிட்டாபாய் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
‘தமிழின் சிறப்பு’ எனும் தலைப்பில் முத்துக்குமாா், இசக்கிமாரி ஆகியோா் மாணவா் உரை ஆற்றினா். மாணவா்கள் வஹாப் தாரிக், வெங்கடேஷ் பாபு ஆகியோா் ‘பொன் தெறித்த மேற்கு’ எனும் நூலினை திறனாய்வு செய்து பேசினா். மாணவிகள் சரஸ்வதி மற்றும் இந்துஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். மாணவா் ராஜசேகா் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியை ரெஜினா பேகம் செய்திருந்தாா்.
முன்னதாக மாணவா், மாணவிகளின் நடனம், பேச்சு, விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.