திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், மத்திய மாவட்ட திமுக செயலருமான மு.அப்துல் வஹாப் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செய்யப்பட உள்ளது.
மேலும் மத்திய மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, பேரூா், கிளைக் கழகங்கள் தோறும் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டும். கிராமங்கள் தோறும் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற வேண்டும். அவரது நினைவை போற்றும் வகையில் ஏழை, எளியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மரியாதை செலுத்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.