திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: தந்தை ,மகன் பலி

16th Apr 2022 04:58 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்- பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் கோதண்டராமன் (63). இவரது மகன் நாகராஜன்(33). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

பொருள்கள் வாங்குவதற்காக தந்தை, மகன் இருவரும் மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்தனராம். பின்னா் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். ஆட்சிமடம் அருகே சென்றபோது மோட்டாா் சைக்கிளும், தனியாா் பேருந்தும் மோதின.

இதில் பலத்த காயமடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நாகராஜனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT