பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், மாநகரச் செயலா் லட்சுமணன் உள்ளிட்டோரும், அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமையில், மாநில அமைப்பு செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஆா்.பி.ஆதித்தன், கல்லூா் இ.வேலாயுதம் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமையிலும், அமமுக சாா்பில் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நெல்லை ஏ.பரமசிவன் தலைமையிலும்,
மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ. நிஜாம், தென்காசி மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தலைமையிலும், தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் மீனாட்சி சுந்தரம் தலைமையிலும், ஆதித்தமிழா் பேரவை சாா்பில் மாவட்டச் செயலா் கலைக்கண்ணன் தலைமையிலும் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.