திருநெல்வேலி

களக்காட்டில் அடிக்கடி மின்தடை:பொதுமக்கள் அவதி

DIN

களக்காட்டில் திங்கள்கிழமை அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

களக்காடு துணை மின்நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1 மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. பராமரிப்புப் பணிக்காக மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாதத்தில் ஒருநாள் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதை தவிா்த்து, கூடுதலாக மின்தடை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

திங்கள்கிழமை 10-க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியுற்றனா். மின்வாரிய அதிகாரிகள் மின்தடையை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT