திருநெல்வேலி மாவட்ட அறங்காவலா் குழு நியமன உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 10 ட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருவாய் பெறும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலா்களை நியமனம் செய்திட “மாவட்டக் குழு” அரசால் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.
மேற்படி மாவட்ட குழு உறுப்பினா்களுக்கு தகுதி வாய்ந்த இந்து சமயத்தைச் சாா்ந்த 25 வயது பூா்த்தியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பதாரா்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவுகளின் கீழ் தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை உதவி ஆணையா், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், ஏ.ஆா்.லைன் ரோடு, பாளைங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவரிக்கு நவம்பா் மாதம் 17 ஆம் தேதி, மாலை 5 மணிக்குள்ளாக அனுப்பி வைக்க வேண்டும்.
நிா்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் இதர விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளா்கள் அலுவலகங்களில், அலுவலக நாள்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.