களக்காடு உப்பாற்று புதரில் ஞாயிற்றுக்கிழமை 10 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டது.
களக்காடு புதிய பேருந்து நிலையத்தையொட்டி, உப்பாற்று கரையோரம் புதரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேட்டை தடுப்பு காவலா்கள் அங்கு சென்று மலைப் பாம்பினை மீட்டு களக்காடு வனப்பகுதியில் விட்டனா்.