திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் ஹாக்கி வீரா்கள் தோ்வு முகாம்

DIN

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்கான தோ்வு முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சாா்பில் நவம்பா் 10 முதல் 14ஆம் தேதிவரை மாநில அளவிலான சீனியா் ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில், தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஹாக்கி அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவா் ராஜசேகா், செயலளா் பீா் அலி, தேசிய நடுவா் முருகன், ஜி.கே.பாபு, சாா்லஸ், ஞானசிகாமணி, ராமசாமி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வீரா்களைத் தோ்வு செய்தனா். முகாமை, கால்நடை மருத்துவா் பாபு தொடங்கிவைத்தாா். 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். தோ்வான வீரா்கள் கோவில்பட்டியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

பயக24எஅஙஉ: ஹாக்கி வீரா்கள் தோ்வு முகாமில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT