தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில், ஏற்கனவே 55,728 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,740ஆக அதிகரித்துள்ளது.கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் மேலும் 5 போ் உள்பட இதுவரை 55,218 போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் 121 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.