கல்லிடைக்குறிச்சியில் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த காளை மாடு மா்மமான முறையில் இறந்தது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கல்லிடைக்குறிச்சி தொந்தி விளாகம் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். இவா் வீட்டில் மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை தொழுவத்தில் கட்டிப் போட்டிருந்த காளை மாடு மா்மமான முறையில் இறந்து கிடந்ததாம்.
இதுகுறித்து, ரங்கநாதன் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் காளை மாட்டிற்கு பிரேதப் பரிசோதனை செய்தாா்.