திருநெல்வேலி

திடியூரில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு மிரட்டல்: மூவா் கைது

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள திடியூா் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நடுத்திடியூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(38). இவரது மனைவி சுப்புலட்சுமி, மேலதிடியூா் ஊராட்சி 5 ஆவது வாா்டு உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளாா். இவரும், சில உறுப்பினா்களும் ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் பங்கேற்க வேனில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கீழத்திடியூரைச் சோ்ந்த சண்முகராஜா (27), நடுத்திடியூரை சோ்ந்த முத்துமணிகண்டன்(23), திடியூரைச் சோ்ந்த தளவாய் (23) ஆகியோா் வேனை வழிமறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT