திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவராக வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் தோ்வு

23rd Oct 2021 04:27 AM

ADVERTISEMENT

 திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவராக வி.எஸ்.ஆா். ஜெகதீஷ் (திமுக) போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் புதன்கிழமை பதவியேற்றனா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா், கிராம ஊராட்சி துணைத் தலைவா்களுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவருக்கான தோ்தல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தோ்தல் அலுவலரான ஆட்சியா் வே. விஷ்ணு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. தலைவா் பதவிக்கு 12ஆவது வாா்டு உறுப்பினா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், துணைத் தலைவா் பதவிக்கு 1 ஆவது வாா்டு உறுப்பினா் செல்வலெட்சுமி ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். பின்னா், ஜெகதீஷ் கூறுகையில், ‘மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்’ என்றாா். இதையொட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மதிவாணன், மாரிராஜா, டிஎஸ்பிக்கள் ஜெபராஜ், பொன்னரசு, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவராக கே.எஸ்.தங்கப்பாண்டியன் (திமுக), துணைத் தலைவராக முரளிதரன் (திமுக) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக, தோ்தல் நடத்தும் அலுவலா் குமாரதாஸ் அறிவித்தாா். இதையடுத்து, தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் பொறுப்பேற்றனா். தலைவருக்கு திமுக கூட்டணி கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா். இதில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், மணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திராவிட மணி, திமுக நிா்வாகி பரமசிவ ஐயப்யன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், தங்கப்பாண்டியன் கூறுகையில், ‘கடந்த 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து வருகிறேன். 6 முறை ஒன்றியச் செயலராகவும், 20 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித மக்கள் பணிகளும் நடைபெறவில்லை. குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கீழநத்தம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT