திருநெல்வேலி

அரசு போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளா் சம்மேளம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற பணியாளா்களின் அகவிலைப்படி உயா்வை ஒப்பந்த உயா்வுடன் சோ்த்து வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, சம்மேளன பொருளாளா் ஏ.ராஜாஜி தலைமை வகித்தாா். துணைச் செயலா் மந்திரமூா்த்தி, துணைத்தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் ராமசந்திரன், உத்தரம், சந்தானம், ஜெயராஜ், முத்துகிருஷ்ணன்உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி பயக21பதஅச:

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT