திருநெல்வேலி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

DIN

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் துறையின் சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு விடியோ வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கயுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீா் சேகரிப்பின் அவசியம், அதன் பயன் குறித்து

அறியும் வகையிலும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை அமைத்திட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீா் சேகரிப்பு வாகனப் பிரசாரம் தொடங்கியது. இப்பிரசாரத்தை ஆட்சியா் அலுலவக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் கோபால், உதவி நிா்வாக பொறியாளா் எஸ்.ஆதிநாராயணன், துணை நில நீா் வல்லுநா் என்.முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT