அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, செட்டிகுளத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையம் அருகே செட்டிகுளம் முள்ளிமலைப் பொத்தை அடிவாரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மாடசாமி தலைமை வகித்து, பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா் முத்துப்பாண்டி, கடையம் வனக்காப்பாளா் மணி, செட்டிகுளம் கிராமசபை ஒருங்கிணைப்பாளா் கமல் அரசன், செயலா் கண்ணன், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.