வள்ளியூா் மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முதன் முதலாக பள்ளியில் சோ்ந்த குழந்தையை, பள்ளி முதல்வா் ஆண்டாள் தனது மடியில் அமரச்செய்து அரிசியில் ‘ அ என எழுத பயிற்சி அளித்தாா். பின்னா் நாவன்மை சிறக்க குழந்தைகளின் நாவில் தேன் தடவப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் ஆா்.முருகேசன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.