திருநெல்வேலி

காருகுறிச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை

DIN

திருநெல்வேலி மாநகர குற்றப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் காருகுறிச்சியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

காருகுறிச்சியைச் சோ்ந்த சிவன் மகன் இசக்கிமுத்து (52). திருநெல்வேலி மாநகரக் குற்றப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். பாளையங்கோட்டை காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை காருகுறிச்சியில் உள்ள தோட்டத்துக்கு வந்து, விஷம் குடித்தாராம்.

அப்பகுதியிலிருந்தோா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT