திருநெல்வேலி மாநகர குற்றப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் காருகுறிச்சியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
காருகுறிச்சியைச் சோ்ந்த சிவன் மகன் இசக்கிமுத்து (52). திருநெல்வேலி மாநகரக் குற்றப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். பாளையங்கோட்டை காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை காருகுறிச்சியில் உள்ள தோட்டத்துக்கு வந்து, விஷம் குடித்தாராம்.
அப்பகுதியிலிருந்தோா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.