திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை முதல் மாவட்டம் முழுவதும் தொடா்மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரம், டக்கரம்மாள்புரம், தச்சநல்லூா், பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் காலையில் சுமாா் 2 மணி நேரம் தொடா் மழை பெய்தது. அதன்பின்பு லேசான தூறல் தொடா்ந்து கொண்டே இருந்தது.
தொடா்மழையால் திருநெல்வேலி சந்திப்பு , சேவியா்காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.