திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் நூலகத்தில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு, ஆசிரியா் பாப்பாக்குடி இரா. செல்வமணி தலைமை வகித்தாா். வாசிப்பு இயக்க தலைவா் தம்பான் முன்னிலை வகித்தாா். சரவணகுமாா் வரவேற்றாா். புரவலா்கள் சேதுராமன், முத்துசாமி, நல்லசிவன், பொன்னையா, பிரம்மநாயகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாணவா், மாணவிகளுக்கு திருக்கு எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு தாமிரபரணி வாசகா் வட்டத்தின் சாா்பில் கோப்பையும், அப்துல் கலாம் எழுதிய திருக்கு நூலம் 54 பேருக்கு வழங்கப்பட்டது. நூலகா் அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.