திருநெல்வேலி

பாளை.யில் கடையை உடைத்து திருட்டு

1st Nov 2021 05:19 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கோயில் மற்றும் கடையில் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை திருநாவுக்கரசு நாயனாா் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவா், திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே கடை நடத்தி வந்தாா். கடந்த 29 ஆம் தேதி தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாராம்.

மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ .15,000 ரொக்கம் மற்றும் ரூ. 3000 மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, கொக்கிரகுளம் இசக்கியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடி சென்றனா். அதில், ரூ.5000 வரை காணிக்கை பணம் இருந்திருக்கும் எனகூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிா்வாகி குணசேகா் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT