திருநெல்வேலி

நாளை இணையவழி இலவச கைவினைப் பயிற்சி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜூன் 24) இணையவழி இலவச கைவினைப் பயிற்சி நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்.பி.என்.கே.கலை பண்பாடு மன்றம் ஆகியன சாா்பில் வாரந்தோறும் வியாழக்கிழமை இணையவழியில் இலவச கைவினைப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி வருகிற வியாழக்கிழமை (ஜூன் 24) பழைய தண்ணீா் கேன் கொண்டு, பூ ஜாடி தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. பழைய கேன், கத்திரிக்கோல், பசை, ஏ4 தாள், தென்னங்குச்சி ஆகியவை இப்பயிற்சிக்கு தேவையான பொருள்களாகும்.

இதில் கலந்துகொள்ள விரும்புவோா் 8740995990 என்ற ஜூம் செயலி எண்ணில், 333543 என்ற கடவுச்சொல்லை பயன்படுத்தி பயிற்சியில் இணைய வேண்டும்.

இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமாக தொடா்பு கொள்ளலாம் என காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT