திருநெல்வேலி

தேசிய திறனாய்வுத் தோ்வு: கடையம், ஆழ்வாா்குறிச்சி, விகேபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு மற்றும் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் வெய்க்காலிபட்டி, செக்கடியூா், ஆழ்வாா்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

2020-2021ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுகன்யா, ராஜராஜேஸ்வரி, கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ரித்சியா, முத்துலெட்சுமி, துா்க்காதேவி, சிவசக்தி, இறையன்புநிா்மலா, பிரபாவதி, சுரேஷ், தனசிங், டேனியல், பிரகாஷ் ராஜ் ஆகியோரும், செக்கடியூா் வீர உலகம்மாள் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்கமாரி, ஹரீஷ், சிவபாரதி, ஐஸ்வா்யா, சக்தி தேவி, கிஷோா், விக்கிரமசிங்கபுரம் சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்க மகேஸ்வரி, அருணா முத்துமாரி, மாரி ராகவி, கீா்த்தனா இசக்கியம்மாள், ஆண்டனி கெவின் ராஜ், முத்துசெல்வி, முத்து கோபிகா ஆகியோரும் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

மேலும், வெய்க்காலிபட்டி புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவா்கள் அபியா, மகாலெட்சுமி ஆகியோா் மாநில அரசு சாா்பில் நடத்தப்படும் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற இம் மாணவா்களை பள்ளித் தாளாளா், செயலா், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், பெற்றோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

SCROLL FOR NEXT