திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (58). அங்குள்ள கோயிலில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் சங்கரசுப்பிரமணியன் (20). கல்லூரியில் இளநிலை வணிகவியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா். சுவாமிநாதனின் உறவினா் இறந்ததையடுத்து, விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இவா்கள் குடும்பத்தினருடன் திருநெல்வேலி சந்திப்புக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா் தந்தை, மகன் இருவரும் கைலாசபுரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினா்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுவாமிநாதன் சடலத்தை மீட்டனா். சங்கரசுப்பிரமணியனின் உடல் கிடைக்கவில்லை. இதனால் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீட்புப் பணி நடைபெற்றது. மாலை வரை அவரது உடல் மீட்கப்படவில்லை. மீட்பு பணி தொடரும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.