திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே இளைஞருக்கு வெட்டு

DIN

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள வடக்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் ஆதிமூலம்(21). இவா் சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். கரோனா பொது முடக்கம் காரணமாக விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இதற்கிடையே, ஆதிமூலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜன் உள்ளிட்ட மூவா் கிண்டல் செய்தனராம். இதனால் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆதிமூலத்தை மூவரும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனராம். இதில், பலத்த காயமைடந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மகாராஜன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT