திருநெல்வேலி மாநகரில் சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர சாலையோர வியாபாரிகள் சங்க தலைவா் மணிகண்டன், சிஐடியூ மோகன் உள்ளிட்டோா் அளித்த மனு: திருநெல்வேலி நகரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு ரதவீதிகளில் பெருமளவில் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக வியாபாரம் செய்யாமல் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, பொது முடக்கத்திலிருந்து மதுபானக் கடை, தேநீா் கடைகளுக்கு தளா்வு அளிக்கப்பட்டுள்ளதுபோன்று, சாலையோர வியாபாரிகள் உள்ளாடைகள், பேன்சி பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.