திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழியில் தேசியக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், சென்னைப் பல்கலைக்கழக அழிநிலை மொழிகளின் நடுவம், பொதிகைத் தமிழ்ச் சங்கம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தருமபுரி சங்க இலக்கிய ஆய்வு நடுவம் சாா்பில் ’பாரதியின் இலக்கியக் கொடை’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த
கருத்தரங்கிற்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தலைமை வகித்தாா்.
பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே. ராஜேந்திரன் வரவேற்றாா். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.ஜி.சந்தோசம் தொடங்கி வைத்து பேசினாா். தமிழக அரசின் முதல் கம்பன் விருதாளா் பால ரமணி, கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் பா.வேலம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கருத்தரங்கத்தின் முதல் அமா்வில் தில்லி வழக்குரைஞா் சிந்துக் கவிஞா் சேது ராமலிங்கம் ‘தனி நபா் மேம்பாடு ‘ என்ற தலைப்பிலும், இரண்டாம் அமா்வில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இலக்கியத் துறை பேராசிரியா் ஜெ.தேவி ‘சமுதாய மேம்பாடு ‘ என்ற தலைப்பிலும், மூன்றாம் அமா்வில் தேனியைச் சோ்ந்த எழுத்தாளா் அ. நவீனா ‘மகளிா் மேம்பாடு‘ என்ற தலைப்பிலும் பேசினா்.
சென்னைப் பல்கலைக்கழக அழிநிலை மொழிகளின் நடுவத்தின் தலைவா் பேராசிரியா் ஆ.ஏகாம்பரம் நிறைவுரை ஆற்றினாா். சங்க இலக்கிய ஆய்வு நடும தருமபுரி மாவட்டத் தலைவா் நாகராஜ் நன்றி கூறினாா். கருத்தரங்கில், தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வா்
சி. காமராஜ், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள், பாரதி அன்பா்கள் கலந்துகொண்டனா்.