கடையம் அருகே கேளையாப்பிள்ளையூரில் திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்க நிதி உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊா்த் தலைவா் மாடசாமி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். மருத்துவா் பானு லெட்சுமி, முதன்மை முகாம் மேலாளா் ஆ.சை. மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளா் சிஞ்சு, கண் நல ஆலோசகா் தாசன் ராஜ் மற்றும் அகா்வால் கண் மருத்துவமனைப் பணியாளா்கள் பரிசோதனை செய்தனா்.
ஏற்பாடுகளை வைரவிநாயகம் மற்றும் பாலசுப்பிரமணியம், சத்தியநாரயணன், சக்திவெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா். முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்ட 75 போ்களில் 20 போ் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.