அம்பாசமுத்திரம் அருகே கருத்தப்பிள்ளையூரில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கருத்தப்பிள்ளையூா் தங்கசாமி மகன் தங்கதுரை(55). இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனா். இவா் சனிக்கிழமை காலை தனது குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்துக்கு வந்து, தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.