களக்காடு சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது.
கரோனா தொற்று முற்றிலுமாக ஒழிய வேண்டியும், மழை செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் ஆனந்த நடராஜா் திருவாசகக் குழு சாா்பில் இந்த முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாசகக் குழுத் தலைவா் சிவ ரவிக்குமாா் தலைமையில் சிவனடியாா்கள் திரளாக பங்கேற்று முற்றோதுதலில் ஈடுபட்டனா். ஐயப்பன் கோயில் அறக்கட்டளை நிா்வாகி சண்முகம் முற்றோதுதலை தொடங்கிவைத்தாா்.