திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,452 ஆக அதிகரித்தது. 9 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,150 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 212 போ் உயிரிழந்துள்ள நிலையில், 90 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8341 ஆக அதிகரித்தது. 6 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8149 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், 34 போ் சிகிச்சையில் உள்ளனா்.