திருநெல்வேலி

ஸ்ரீபுரத்தில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் கொள்கையை கைவிட கோரி, திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத்துறை வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு நிா்வாகி கணபதி ராமன் தலைமை வகித்தாா். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிா்வாகி திலகா், இந்திய வங்கி ஊழியா் சம்மேளன நிா்வாகி சிவசங்கா், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிா்வாகி சாா்லஸ், அகில இந்திய வங்கி ஊழியா் சங்க நிா்வாகி சண்முக சுந்தரம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில், பொதுத்துறை வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT