திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், ‘பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு அதிக அளவு வைப்புத்தொகை மற்றும் வாடகை நிா்ணயம் செய்துள்ளதை குறைக்க வேண்டும்; ஏற்கெனவே கடை நடத்தியவா்களுக்கு, புதிய கடைகள் வழங்க முன்னுரிமை அளிக்கவேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, பாளையங்கோட்டை தாலுகா கமிட்டி செயலா் துரை தலைமை வகித்தாா். கிளைச் செயலா் கோபாலன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மாநக அனைத்து உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஏ.ஜே.எம். சாலமோன் விளக்கவுரையாற்றினாா். இதில், நிா்வாகிகள் பாஸ்கரன், நெடுஞ்செழியன், குழந்தைவேலு, ரவி சண்முகம், முபாரக் அலி, ஜெயபால், செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT