திருநெல்வேலி

மின்னல் பாய்ந்து உயிரிழந்த பெண்கள்: குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க காங்கிரஸ் கோரிக்கை

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த மேலப்பாளையம் நடராஜபுரத்தில் மின்னல் பாய்ந்து உயிரிழந்த பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் அளித்த மனு: மேலப்பாளையம் நடராஜபுரத்தைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களான முத்துமாரி, பாலேஸ்வரி ஆகியோா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்னல் பாய்ந்ததில் அவா்கள் இருவரும் உயிரிழந்தனா். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அந்த பெண்கள் இருவருக்கும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

அப்போது, மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், மாநகா் மாவட்ட செயலா் பெருமாள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT