திருநெல்வேலி

குறிச்சிகுளத்தில் சமத்துவபுரம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளத்தில் சமத்துவபுரம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குறிச்சிகுளம் மக்கள் அளித்த மனு: ‘எங்கள் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் வீடு இல்லாமல் உள்ளனா். எனவே, எங்கள் கிராமத்தில் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு அதில் சமத்துவபுரம் அமைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தியாகராஜநகா் பொது நலச்சங்கத்தினா் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தியாகராஜ நகா், ஆசீா்வாத நகா், வேலவன் காலனி, மகாராஜநகா் ஆகியவற்றின் நீராதாரமாகத் திகழும் நொச்சிகுளத்திற்கு தண்ணீா் வரும் நீா் வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீா் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT