பேட்டை அருகே ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பேட்டை அருகே உள்ள ரகுமான்பேட்டை பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகம்மது சுல்தான் அலாவுதீன் (34). ஓட்டுநா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால் க குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த முகம்மது சுல்தான் அலாவுதீன் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.