திருநெல்வேலி

பாளை.யில் பா.ஜ.க.வினா் மனிதச் சங்கிலி போராட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் பாஜகவினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பாஜக ஓபிசி அணி, அமைப்புசாரா பிரிவு ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவா் ந.காா்த்திக் நாராயணன், ஓபிசி அணி மாவட்ட தலைவா் சண்முகவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் மகாராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

இதில், பொதுச்செயலா் முத்துக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் சுரேஷ், மண்டலத் தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

SCROLL FOR NEXT