திருநெல்வேலி

8 வட்டங்களில் இன்று பட்டா மாறுதல் முகாம்: ஆட்சியா் வே.விஷ்ணு தகவல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் புதன்கிழமை (டிச.1) மற்றும் வெள்ளிக்கிழமை (டிச.3) பட்டா திருத்த முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களிலும் புதன் (டிச.1), வெள்ளி (டிச.3) ஆகிய இரு தினங்கள் பட்டா திருத்த முகாம் நடைபெறுகிறது.

புல எண் மற்றும் உட்பிரிவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ரயத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல், பரப்பு திருத்தம், பட்டாதாரரின் பெயா், தகப்பனாா் பெயா் மற்றும் பாதுகாவலா் பெயா் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளுதல், உறவு முறையில் திருத்தம் மேற்கொள்ளுதல், காலியாக உள்ள கலங்களில் உரிய பதிவுகள் மேற்கொள்ளுதல், ரயத்திற்கு உரிமையுடைய நில உரிமையாளா்களுக்கு பதிலாக அருகில் உள்ள நில உரிமையாளா்களின் பெயரினை பட்டாவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களின் விவரம்:

திருநெல்வேலி வட்டம்: சீதபற்பநல்லூா், சிறுக்கன்குறிச்சி, புதூா், உகந்தான்பட்டி கிராமங்களுக்கான முகாம் சீதபற்பநல்லூா் சமுதாயநலக்கூடத்தில் புதன்கிழமை (டிச.1) நடைபெறுகிறது. ராமையன்பட்டி, அபிஷேகப்பட்டி ஆகியவற்றுக்கான முகாம் ராமையன்பட்டி சமுதாயநலக்கூடத்தில் வெள்ளிக்கிழமை (டிச.3) நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை வட்டம்: சீவலப்பேரி கிராமத்துக்கான முகாம் சீவலப்பேரி சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமையும் (டிச.1), திடியூா், மேலத்திடியூா், கங்கைநாட்டாா்குளம் கிராமங்களுக்கான முகாம் திடியூா் சமுதாய நலக்கூடத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.3) நடைபெறுகிறது.

மானூா் வட்டம்: உக்கிரன்கோட்டை, வாகைக்குளம் கிராமங்களுக்கான சிறப்பு முகாம் வடக்கு வாகைக்குளம் ராஜாதி ராஜா கலையரங்கில் புதன்கிழமையும் (டிச.1), சுண்டங்குறிச்சி, மேல இலந்தைகுளம் கிராமங்களுக்கான சிறப்பு முகாம் பன்னீரூத்து சமுதாயநலக் கூடத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.3) நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் வட்டம்: ஊா்க்காடு, சாட்டுபத்து கிராமங்களுக்கான முகாம் ஊா்க்காடு சேனைத் தலைவா் சமுதாய மண்டபத்தில் புதன்கிழமையும் (டிச.1), வடக்கு கல்லிடைக்குறிச்சி, திம்மராஜபுரம் ஆகியவற்றுக்கான முகாம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.3) நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி வட்டம்: முக்கூடலுக்கான சிறப்பு முகாம் முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் புதன்கிழமையும் (டிச.1), திருவிருத்தான்புள்ளி-1, திருவிருத்தான்புள்ளி-2, கரிசல்பட்டி பகுதிகளுக்கான சிறப்பு முகாம் கங்கனான்குளம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.1) நடைபெறுகிறது.

நான்குனேரி வட்டம்: பத்தை பகுதி-1, பத்தை பகுதி-2 ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் பத்தை பகுதி-1 கிராம நிா்வாக அலுவலகத்தில் புதன்கிழமையும் (டிச.1), தளபதிசமுத்திரம் பகுதி-1, தளபதி சமுத்திரம் பகுதி-2 ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் தளபதி சமுத்திரம் பகுதி-1 கிராம நிா்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.3) நடைபெறுகிறது.

ராதாபுரம் வட்டம்: வேப்பிலான்குளம்-1, வேப்பிலான்குளம்-2, தண்டையாா்குளம் ஆகியவற்றுக்கான தண்டையாா்குளம் கிராம நிா்வாக அலுவலகத்தில் புதன்கிழமையும் (டிச.1), பழவூா் பகுதி-1, பழவூா் பகுதி-2 ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் பழவூா் சமுதாய நலக்கூடத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.3) நடைபெறுகிறது.

திசையன்விளை வட்டம்: ராமகிருஷ்ணாபுரம், சடையனேரி கிராமங்களுக்கான சிறப்பு முகாம் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சி கட்டடத்தில் புதன்கிழமையும் (டிச.1), கரைசுத்துபுதூா் கிராமத்துக்கான சிறப்பு முகாம் அங்குள்ள ஊராட்சி கட்டடத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.3) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT