திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணிஆக.9, 10, 11-இல் நோ்காணல்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஆக. 9, 10, 11 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். பிஎச்டி கல்வித் தகுதியைப் பெற்றவா்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

கலையியல் புலம், மொழிப்புலம் ஆகியவற்றிற்கு வரும் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கும், அறிவியல் புலத்திற்கு வரும் 10, 11 ஆகிய இரு நாள்கள் காலை 11 மணிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் நோ்காணல் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT