திருநெல்வேலி

நெல்லையில் 8 மையங்களில் நீதிமன்ற பணியாளா் தோ்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 மையங்களில் நீதிமன்ற பணியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி, ராணி அண்ணா கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, அரசு சட்டக் கல்லுாரி உள்ளிட்ட 8 மையங்களில் நீதிமன்ற பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 5,575 போ் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதில், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1,428 பேருக்கு தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை உள்ளிட்ட பல வட மாவட்டங்களை சோ்ந்த தோ்வா்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால் அவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

நீதிமன்ற பணியாளா் தோ்வை முன்னிட்டு தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT